யே த்1வக்ஷரமனிர்தே3ஶ்யமவ்யக்1த1 ப1ர்யுபா1ஸதே1 |
ஸர்வத்1ரக3மசி1ந்த்1யம்ச1 கூ1ட1ஸ்த2மச1லம் த்4ருவம் ||3||
ஸன்னியம்யேன்ந்ரியக்3ராமம் ஸர்வத்1ர ஸமபு3த்3த4ய: |
தே1 ப்1ராப்1னுவந்தி1 மாமேவ ஸர்வபூ4த1ஹிதே1 ரதா1: ||4||
யே—--எவர்; து--—ஆனால்; அக்ஷரம்--—அழியாததை; அநிர்தேஶ்யம்—--வரையறுக்க முடியாததை; அவ்யக்தம்--—வெளிப்படுத்தப்படாததை; பர்யுபாஸதே--—வழிபடுகின்றார்களோ; ஸர்வத்ர-கம்—--அனைத்தும் நிறைந்ததை; அசிந்த்யம்--—நினைக்க முடியாததை; ச--—மற்றும்; கூட-ஸ்தம்—--மாறாததை; அசலம்—--அசையாததை; த்ருவம்—--நித்தியமானதை; ஸன்னியம்ய—--கட்டுப்படுத்தி; இந்திரிய-கிராமம்—--புலன்களை; ஸர்வத்ர-—எல்லா இடங்களிலும்; ஸம-புத்தயஹ--—ஸம-மனம் கொண்டு; தே-—அவர்களும்; ப்ராப்னுவந்தி--—அடைவார்கள்; மாம்--—என்னை; ஏவ--—மேலும்; ஸர்வ---பூத-ஹித--—அனைத்து உயிர்களின் நலனில்; ரதாஹா--—ஈடுபாடு கொண்டுள்ளவர்கள்
BG 12.3-4: ஆனால் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லா இடங்களிலும் ஒரே எண்ணத்துடன் அனைத்து உயிர்களின் நலனில் ஈடுபட்டு முழுமையான அழியாத, வரையறுக்க முடியாத, வெளிப்படுத்தப்படாத எங்கும் நிறைந்த, நினைக்க முடியாத, மாறாத, நித்தியமான மற்றும் அசையாத முழுமையான உண்மையின் உருவமற்ற அம்சத்தை வணங்குபவர்களும் என்னை அடைகிறார்கள்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
தனிப்பட்ட வடிவத்தை வழிபடுவதே சிறந்தது என்று கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், உருவமற்றவர்களின் வழிபாட்டை எந்த வகையிலும் நிராகரிப்பதில்லை என்று தெளிவுபடுத்துகிறார். எங்கும் நிறைந்த, வரையறுக்க முடியாத, வெளிப்படுத்தப்படாத, நினைக்க முடியாத, அசையாத, நித்தியமான ப்ரஹ்மத்தில் தங்களை அர்ப்பணிப்பவர்களும் கடவுளை அடைகிறார்கள்.
பல்வேறு இயல்புகளைக் கொண்ட எல்லையற்ற உயிரினங்களை உருவாக்கிய பரமாத்மாவும் தனது ஆளுமையின் எல்லையற்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறார். நமது வரையறுக்கப்பட்ட புரிதலுக்காக, கடவுளின் எல்லையற்ற வெளிப்பாடுகளை வகைப் படுத்துகிறோம். அதன்படி, வேத வியாசர் முந்தைய வசனத்தின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கடவுளின் பல்வேறு வெளிப்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார். ப்ரஹ்மன், பரமாத்மா மற்றும் பகவான். இந்த வகைகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வழிபடலாம், ஆனால் கடவுளைப் பற்றிய ஒருவரின் சொந்த கருத்து மட்டுமே சரியானது மற்றவர்களுடையது தவறானது என்று ஒருபோதும் கூறக்கூடாது.
4.11வது வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது: ‘மக்கள் எந்த வகையில் என்னிடம் சரணடைகிறார்களோ, அதற்கேற்ப நான் கைம்மாறு செய்கிறேன். பிருதையின் மகனே, அனைவரும் அறிந்தோ அறியாமலோ எனது வழியைப் பின்பற்றுகிறார்கள்.’ இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர், உருவமற்றவர்களை வணங்குபவர்களும் அவரை அடைகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார். உயர்ந்த முழுமையான உண்மையின் பண்புகளற்ற வெளிப்பாட்டுடன் ஒன்றுபடுவதே அவர்களின் விருப்பமாக இருப்பதால், கடவுள் அவர்களை வெளிப்படுத்தப்படாத, எங்கும் நிறைந்த ப்ரஹ்மனாகச் சந்திக்கிறார்.